- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
தூத்துக்குடி
ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்வதற்கு தடை விதிக்கவும், அந்த ஆலையை நிரந்தரமாக மூட
வலியுறுத்தியும் குமரரெட்டியாபுரம், திருவைகுண்டம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள்
வெகுநாட்களாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். ஸ்டெர்லைட் ஆலையால் நிலத்தடி
நீர் மாசடைவதாகவும், அதிலிருந்து வெளியேறும் மாசடைந்த புகையால் பல்வேறு நோய்கள் ஏற்படுவதாகவும்
பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் மக்களின் பிரச்சனை குறித்து கருத்து கேட்க
முடியாத அடிமை எடப்பாடி அரசு தொடர்ந்து வாய்மூடி மௌனியாகவே இருந்து வந்தது.
இந்நிலையில்,
கடந்த 22ம் தேதி (செவ்வாய்க்கிழமை) போராட்டம் 100-வது நாளை எட்டுவதை முன்னிட்டு, மாபெரும்
பேரணியாக சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட உள்ளதாக போராட்டக் குழுவினர்
அறிவித்திருந்தனர். இதையடுத்து, போராட்டத்தைக் கட்டுப்படுத்த திங்கள்கிழமையே தூத்துக்குடி
மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவைப் பிறப்பித்தார். அதன்படி, 21-ம் தேதி இரவு 10 மணி
முதல் 23-ம் தேதி காலை 8 மணி வரை குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144-ன் கீழ்,
தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம், சிப்காட் காவல் நிலைய எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகள்
முழுவதற்கும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,
144 தடை உத்தரவை மீறி அன்று காலை 9 மணிமுதல் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பனிமய மாதா கோயிலில்
இருந்து பேரணியாகச் சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது,
பொதுமக்களை போலீஸார் தடுத்து நிறுத்தியதால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திரண்ட பொதுமக்களை போலீஸார் தடியடி நடத்திக்
கலைக்க முற்பட்டதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதில், போலீஸார் மீது போராட்டக்காரர்கள்
கல்வீசித் தாக்குதல் நடத்தினர். இதில் போலீஸார் பலருக்கு காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போலீஸாரின் 3 இருசக்கர வாகனங்களை போராட்டக்காரர்கள்
தீ வைத்துக் கொளுத்தினர்.
இதையடுத்து,
அங்கு மேலும் பொதுமக்கள் கூடிய வண்ணம் இருந்ததால் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல்
போலீஸார் திணறினர். இதையடுத்து, கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி பொதுமக்களை கலைக்க முற்பட்டனர்.
ஆனால் மேலும் அப்பகுதியில் பொதுமக்கள் அதிகளவில் கூடியதால் தூத்துக்குடியை வன்முறை
களமாக மாறியது. இதற்கியை தமிழக காவல்துறை நடத்திய மனிதநேயமற்ற துப்பாக்கி சூட்டினால்
அப்பாவி பொதுமக்கள் 13 பேர் கொலை செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகின. மேலும் ஏராளமான
பொதுமக்கள் குண்டடி காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவதாகவும்
செய்திகள் கூறப்பட்டன.
ஆனால் இதுகுறித்து
தூத்துக்குடி மக்களிடம் கேட்கையில், துப்பாக்கி சூட்டில் 67 பேர் இறந்துள்ளதாகவும்,
இந்த செய்தி வெளியில் தெரியக்கூடாது என்பதற்காக அவர்களை அனாதை பிணங்கள் போல சித்தரித்து,
மற்ற மருத்துவமனைகளுக்கு அனுப்பாய் வைத்துள்ளதகா கூறினார்.




Comments
Post a Comment